17 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு சீமான் பங்கேற்கிறார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் க.பரந்தாமன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடங்குளத்தில் அணுஉலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் வருகிற 26-ந் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.
சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் இம் மாநாடு அணுஉலை எதிர்ப்புக்குழு சார்பில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு பெரியார் திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகிறார்.

மேலும் மாநாட்டில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது’’ என்று கூறினார்.மாநாட்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கக்குழுத் தலைவர் உதயக்குமார்,
மனித நேய மக்கள்கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் வடிவேல் ராவணன், தியாகி வெங்கட்ராமன்,
கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு கூடங்குளத்தில் அணுஉலை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேசுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக