28 பிப்ரவரி 2012

ஜெனீவா செல்லவுள்ள மரியா ஒற்றேரோ.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு - ஜனநாயகம் - மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் முதலாம் திகதி ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் என இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்றிருந்து போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவினது தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவை வெள்ளைமாளிகை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக