09 பிப்ரவரி 2012

பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பீரிஸ்!

இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின உளகளாவிய குற்றவியல் நீதி அலுவலகத்துக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே றப் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று முன்தினம் சந்தித்து கலந்தரையாடினர். இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் வலரி பாலரும் கலந்துகொண்டார்.
மேற்படி சந்திப்பில் ஸ்டீபன் ஜே றப், இலங்கை படைகளின் போர்க்குற்றங்கள்தொடர்பில் பல கேள்விகளை கேட்டதாகவும் அதன் போது பீரிஸ் சில கேள்விகளுக்குதடுமாறி மழுப்பல் பாணியில் பதிலலித்ததாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்டீபன் ஜே றப் சில ஆதாரங்களுடன் பிரிஸிடம் கேள்விகளை கேட்டபோது, போர் நடந்து கொண்டிருந்த இறுதிக் காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதை தங்களால் உறுதி செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவித்ததாகவும் உறுதிப்படத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக