21 மார்ச் 2013

சனல் 4 காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணை-பிரித்தானியா

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
நேற்றையதினம் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 45வது கூட்டத் தொடரின்போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பிரித்தானியப் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் மீது முன்னெடுக்கப்படுகின்ற தாக்குதல்களை பிரித்தானியா வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் பிரதம நீதியரசருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரனையின் மூலம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் சந்தேகம் கொள்கின்றது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை நடாத்தும் நாடு ஜனநாயக வழிமுறையினை பின்பற்றுவது அத்தியாவசியமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மக்கள் அடிப்படை மனிதவுரிமைகளை உள்நாட்டில் அனுபவிப்பதற்கு வழிகோலும்.
தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தாமதிப்பதாக குற்றஞ்சாட்டியதுடன் சனல்- 4 காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். என்றார்.
மேலும் எதிர்வரும் புரட்டாதி மாதம் ஜனநாயக முறையில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானியா கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக