01 மார்ச் 2013

முள்ளிவாய்க்காலில் காயப்பட்டிருந்த ஆண்,பெண் போராளிகள் மீது படுபயங்கரம் புரிந்தது சிங்களப்படை!

இறுதி போர் உக்கிரம் பெற்று கொண்டிருந்த வேளை கட்டம் கட்டமாக இலங்கை படைகளினால் அங்கவீனமுற்ற போராளிகள் கைது செய்ய பட்டனர்,கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர் இதில் சிலர் அவ்விடத்திலேயே சிங்கள படையால் சுட்டு படுகொலை செய்யபட்டனர் கைதான போராளிகளில் பலர் விடுதலை செய்ய பட்டதாக சிங்களம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த களமுனையில் இடம்பெற்ற விடயங்கள் மனதை பதை பதைக்க வைக்கும் சம்பவமாக அமைந்துள்ளது,காயத்தில் துடித்து கொண்டிருந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கமால் அவர்கள் துடி துடிக்க வேடிக்கை பார்த்து அப்படியே இறக்க விட்டது சிங்கள படைகள்.இவை தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
கைது செய்ததை ஒப்புக்கொண்ட சிங்களம் மேற்படி அவர்கள் மீது சுமத்த பட்டுள்ள மனித உரிமை மீறல்களை மறுத்து வருகின்றனர்.பல பெண் போராளிகள் காயமடைந்த நிலையில் சீரழிக்க பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தேறியுள்ளது அவர்களின் ஆடைகள் கிழிக்க பட்டு நிர்வாணமாக அவர்களது உடலங்களை சிங்களம் போட்டுள்ளது.அத்துடன் அவர்களின் மார்புகள் வெட்ட பட்டும்,அந்தரங்க உறுப்புகளில் சுட பட்ட காட்சிகள் அதிர்சிகளை கிளப்பியுள்ளன.
குறித்த காட்சிகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்த கோரக்காட்சிகள் அடங்கிய ஆவணங்கள்  ஐநாவின் கரங்களில் ஒப்படைக்க பட்டுள்ளது.இவையே பெரிதும் சிங்கள அரசுக்கு தாக்கத்தினை விளைவிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக