28 மார்ச் 2013

தேரரின் கூற்றுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி!

தமிழ் மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கொண்டு சென்றமையானது இலங்கையின் சட்டத்திற்கு முரணானது என எவராவது குற்றம் சுமத்தினால், எவரும் தனக்கெதிராக நீதிமன்றத்திற்கு செல்லலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அதியுயர் நாடாளுமன்ற மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது நாடாளுமன்ற குழு ஜெனிவாவில் செயற்பட்ட விதம் தொடர்பில் கூட்டமைப்புக்கு எதிராக எவரேனும் நீதிமன்றத்திற்கு சென்றால் அதனை எதிர்கொள்ள கூட்டமைப்பு தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜெனிவாவுக்கு சென்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதான நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கை தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக