04 மார்ச் 2013

அமெரிக்காவின் பிரேரணைக்கு இலங்கையும் ஆதரவு?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்க்கப்போவதில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா பிரதிநிதி ஜெனிவாவில் அறிவித்திருந்தார்.
எனினும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அமெரிக்கா உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணங்கிப்போக சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான இறுதியான நிலைப்பாட்டை மேற்குலகம் எடுப்பதற்கு முன்னர், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இலங்கைத் தூதுவர் ஒருவரை வொசிங்டனுக்கு இன்று அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பிரதிநிதியிடம், அமெரிக்காவுக்கு தாம் சவால் விடுக்கவில்லை என்றும், தீர்மானத்தை எதிர்க்கும் அணுகுமுறையை கைவிடுவதாகவும், சிறிலங்கா தகவல் அனுப்பவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக