31 மார்ச் 2013

தமிழக போராட்டங்களால் கலங்கிப்போயுள்ள சிங்களம் புது டெல்லி செல்ல திட்டம்!

சிறிலங்காவுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பலைகளால் மஹிந்த அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சிறிலங்கா உயர்மட்ட குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி செல்லும் சிறிலங்கா குழுவினர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகளின் சிறிலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வரும் இரு தரப்பு உறவுகளை பாதுகாக்கவும், தமிழகம் செல்லும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்க எடுக்கப்பட வேண்டுமென இந்தியாவை கோரவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தல், தனி ஈழ இராச்சியம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைள தமிழக அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக