11 ஏப்ரல் 2013

அமெரிக்க தூதரின் கோரிக்கை நிராகரிப்பு!

micel_sison_001[1]இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
1957ம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும்.
இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணை அறிக்கையை வெளியிட நேரிடும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் சர்ச்சைகள் எழக்கூடுமெனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் இராணுவ விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக