23 ஏப்ரல் 2013

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை அனுப்புவதில் சிறிலங்கா படைகளுக்கு தொடர்பு!

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் படகுகளை அனுப்புவதன் பின்னணியில், சிறிலங்கா படைத்தரப்பு தொடர்புபட்டுள்ளது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆட்களை படகுகளில் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதன் பின்னணியில், சில குற்றக்குழுக்களுடன் சிறிலங்கா படைத்தரப்பும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது.
அண்மையில் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற இரு குழுவினர் பிடிபட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்புக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அகதிகள் படகுகளை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, முன்னதாக அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் படகுகளை அனுப்புவதன் பின்னணியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச இருப்பதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக