17 ஏப்ரல் 2013

சிங்களத்தின் தான்தோன்றித்தன செயற்பாடுகள் தொடர்கிறது!

attack_002[1]இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாவளை பகுதியில் தமிழர்கள் மீது இனந்தெரியாத சிங்கள கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 பேர் அடங்கிய இந்த குழு, ஏற்கனவே வெள்ளாவளை இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களுடன் தொடர்புடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை அவர்கள் கோவில் நிர்வாக சபை உறுப்பினர்களையே தேடி வந்துள்ளனர். எனினும் அவர்கள் அங்கு இல்லாத நிலையில், கோவில் நிர்வாக சபையின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 3 தமிழர்கள் காயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக