04 ஏப்ரல் 2013

கொரியக் குடாநாட்டில் போர் வெடிக்கும் அபாயம் - கலக்கத்தில் சிறிலங்கா

கொரிய குடாநாட்டில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் சிறிலங்காவை கலக்கமடையச் செய்துள்ளது.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கொரிய குடாநாட்டில் போர் வெடித்தால் அது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அச்சம் கொண்டுள்ளது.
தென்கொரியாவில் சுமார் 20 ஆயிரம் சிறிலங்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.
போர் வெடித்தால், இவர்கள் வேலையிழந்து சிறிலங்கா திரும்பும் நிலை ஏற்படும்.
அதனால் பாரிய அந்நியச் செலவாணி இழப்பு சிறிலங்காவுக்கு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு இது பேரிடியாக அமையும்.
அதேவேளை, கொரிய குடாநாட்டில் போர் வெடித்தால், தென்கொரியாவில் உள்ள 20 ஆயிரம் சிறிலங்கர்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி கொழும்புக்கு அழைத்து வருவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
இந்த விடயத்தில் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு ஆகியவற்றின் உடனடி உதவிகளைப் பெறுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான சிறிலங்கர்களுக்கு தென்கொரியா அண்மைக்காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சேவை, உற்பத்தி, மற்றும் கட்டுமானத்துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக