26 ஏப்ரல் 2013

முப்பது நாட்களேயான குழந்தையை தொடரூந்தில் விட்டு சென்ற தாய்!

30 நாள் குழந்தை 
பிறந்து 30 நாள் ஆன ஆண் குழந்தையோடு. சென்னை எழும்பூரில் இன்று (26.04.2013) காலை புறப்பட இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண்மணி ஏறினார். சென்னை எழும்பூர் தாதர் எக்ஸ்பிரஸ் காலை 6.50 மணிக்கு கிளம்ப தயாராக இருந்தது. திடீரென அந்த பெண் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு இறங்கினார். ரயில் புறப்பட்டது. எஸ்.7 கோச்சில் இருந்த அந்த குழந்தை அழு ஆரம்பித்தது.
இதனைப் பார்த்த பயணிகள் ரயிலில் உள்ள டிடிஆருக்கு தகவல் கொடுத்தனர். அவர் எஸ் 7 கோச்சுக்கு வந்து விசாரித்துள்ளார். நடந்ததை பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பீச் ரயில்வே ஸ்டேசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 7.12 மணிக்கு ரயிலை நிறுத்தை குழந்தை அங்கு ஒப்படைக்கப்பட்டது. ஆய்வாளர் பினய் ஆண்டணி, உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி இவர்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
ராயபுரத்தில் குழந்தைகள் இல்லத்தில் குழந்தையை ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக