28 ஏப்ரல் 2013

அமெரிக்கத் தூதுவர் வரம்பு மீறுகிறாராம்!

அமெரிக்கத் தூதுவர் வரம்பு மீறிச் செயற்படுகின்றார்அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் வரம்பு மீறிச் செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
1961ம் ஆண்டு வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய இராஜதந்திரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் பதற்ற நிலமை குறித்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மிச்சல் சிசன் கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். திருகோணமலை சிங்கள மக்களினால் முஸ்லிம் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனரா என சிசன், கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக