05 ஏப்ரல் 2013

தமிழகம் சிங்கத்தை சீண்டிப்பார்க்கக் கூடாது-மேர்வின்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என சிறீலங்காவின் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுகின்றது,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
எனினும் உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம். இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் விமர்சித்துள்ள அவர், உண்மையான ஹீரோக்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும் அதை இடைநடுவில் கைவிட்டிருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டினர் சிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது அவ்வாறு சிங்கத்தை சீண்டுவதால் தமிழகம் காயமடையப் போகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக