09 ஏப்ரல் 2013

சிறிலங்கா நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலையாம்!

சிறிலங்காவில் அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உணர்வுகளால் முஸ்லிம்களை வதைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படும் வெளிநாட்டுச் செய்தியாளர்களை அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்று சந்தித்துப் பேசினார்.
சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க உரைகள், இழிவுபடுத்தல்கள், முஸ்லிம்களின் வணிகம் மற்றும் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் தொடரும் உள்ளூர் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எண்ணற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்களை அதிகாரிகள் தடுக்க இயலாதுள்ளமை குறித்தும் அமெரிக்கத் தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக