06 ஏப்ரல் 2013

சிறிலங்காவை அண்மிக்கும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள்!

சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சஞ்சரிப்பதாக இந்திய ஊடகமான ஹெட்லைன்ஸ் ருடே தகவல் வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திர கடற்பரப்பில் அடிக்கடி சீன அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் சஞ்சரித்துள்ளதாகக் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இனந்தெரியாத 22 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய மற்றும் சிறிலங்கா கடற்பரப்பில் சஞ்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்திய, அமெரிக்க புலனாய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்து சமூத்திரப் பகுதிக்குள் சீனாவின் நீர்மூழ்கிகள் சவால் எதுவுமின்றி பிரவேசிப்பது இந்திய கடற்படைக்கு மிகவும் குழப்பகரமான விடயமாக அமையும்.
இந்தியாவின் அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு 90 கிலோமீற்றர் தொலைவில் சீனாவின் நீர்மூழ்கி காணப்பட்டதென்ற சந்தேகம் தொடர்பாடல் ஒன்றின் மூலம் ஏற்பட்டிருந்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தகவல் வெளியிட்டுள்ளது.
மலாக்கா நீரிணைக்கு வடமேற்கில் ஆறு தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவுக்கு தெற்கே 13 தொடர்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அரபிக் கடலுக்கு அப்பால் இரு தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல்களை இவ்வாறு பயன்படுத்தக் கூடிய வல்லமை சீனாவிற்கு மட்டுமே காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் கோடிப் புறத்துக்குள் ஊடுருவதற்கு சீனாவின் நீர்மூழ்கிகள் தயாராகிக் கொண்டிருக்கக் கூடும் என்று
அந்த ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக