24 ஏப்ரல் 2013

கோத்தாவும் தயாவும் சந்திப்பு!

தயா-கோத்தா 
கோதபாய ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என்பவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தயா மாஸ்டருடன் மேலும் 23 பேரையும் கோதபாய ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வரணி 52ம் படைப் பிரிவு தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில புதிய முகங்களையும் இம்முறைத் தேர்தலில் அறிமுகம் செய்ய ஆளும் கட்சித் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக