08 ஏப்ரல் 2013

மாத்தளைப் புதைகுழியில் கோத்தாவின் பங்கு – கருத்து வெளியிட மறுத்த பேச்சாளர்

Mohan_Samaranayake_மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தில் சிறிலங்காப் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுக் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க.
மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து அதிபர் ஆணைக்குழுவை நியமிக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
அவரிடம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று மாத்தளைப் புதைகுழி விவகாரத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து கேள்வி எழுப்பியது
அதற்கு, அவர் அதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்து விட்டார்.
அதேவேளை,அதேவேளை, மாத்தளைப் புதைகுழி தொடர்பாக விசாரிக்க அதிபர் ஆணைக்குழுவை நியமிக்கப் போவதான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை ஜேவிபி நிராகரித்துள்ளது.
காலத்தை இழுத்தடிக்கவே சிறிலங்கா அரசாங்கம் அதிபர் ஆணைக்குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம்
குறித்து முறைப்படியான நீதிமன்ற விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக