30 ஏப்ரல் 2013

பெண்களையும் குழந்தைகளையும் விற்கும் நாடு இலங்கை!

மனித உயிருக்கான மரியாதை அற்றுப்போயுள்ளது.பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்;குழந்தையை வீசி எறிகின்றனர்.
பெண்கள்,குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என்று மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாள்களில் ஆஸ்திரேலியாவுக்கு ஆள்களைக் கடத்துகின்றனர்.
வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட அடிமைச் சேவக முறைமை இன்று சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது.
மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். சந்தேகநபர்களை பொலிஸார் சித்திரவதை செய்ய முடியாது.
இந்த ஆண்டில் இதுவரையில் இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் ஒரு சம்பவமே பதிவாகியுள்ளது. எனினும், ஏதேச்சாதிகரமாக கைது செய்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராகப் பதிவாகியுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் ஒரு முறைப்பாட்டை சரியான முறையில் பதிவு செய்யக் கூடிய அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சட்டவிரோதமான உத்தரவுகளை கடைநிலை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய தில்லை. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக