27 ஏப்ரல் 2013

பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில்தான் நடக்குமாம்!

23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நவம்பர் 15 முதல் 17 வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளதுபல்வேறு நாடுகளின் எதிர்க்கட்சிகள், அமைப்புகள், மனிதஉரிமைக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போதிலும், 23வது கொமன்வெல்த் உச்சி மாநாடு திட்டமிட்டபடி சிறிலங்காவிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று நடைபெற்ற கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்குப் பின்னர், பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சரும், கொமன்வெல்த் அமைச்சரவைக் குழுவின் தலைவருமான டிபு முனி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் உச்சி மாநாட்டை நடத்தும் முடிவு அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அதனை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பல்வேறு நாடுகளின் விவகாரங்கள் குறித்து ஒளிவுமறைவின்றி விவாதிக்கப்பட்டது.
இதன்போது, சிறிலங்கா குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆனால், அது குறித்து பகிரங்கமாக கருத்துக் கூற முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்காக சிறிலங்கா செய்து வரும் ஏற்பாடுகள் குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா திருப்தி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக