22 ஏப்ரல் 2013

வடமாகாணசபை தேர்தல் டக்ளஸ் தனித்து களமிறங்குகிறார்?

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈபிடிபியும் இடம்பெற்றுள்ள போதிலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.
பெரும்பாலும் ஈபிடிபி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் உள்ளன.
இதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயாநிதி மாஸ்டரை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறித்து அவர் உறுதிப்படுத்தாத போதிலும், இன்னும் இரண்டு வாரங்களில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக