04 மே 2012

இளம் நடிகை வேண்டுமாம்?

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய அமைச்சர் மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான அமல் ரொட்ரிகோ என்ற நபர் கடத்திச் செல்லப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆத்திரமடைந்துள்ளார்.
இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். அமல் என்ற நபரின் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்களில் ஒருவரான அமல் ரொட்ரிகோ, வெள்ளை வேனில் கடத்தப்பட்டதை அடுத்து ஜனாதிபதியிடம் ஓடிச் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா தமது சகாவை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, அமல் என்ற நபரைக் கைதுசெய்திருந்தால் உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், மறுமுனையில் பேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய,
”இவனிடமிருந்து விசித்திர தகவல்கள் சில கிடைத்துள்ளன. ஒளிப்பதிவும் இருக்கிறது. வேண்டுமாயின் நான் அதனை எடுத்து வருகிறேன். அதனைப் பார்த்துவிட்டு என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் சுமார் 6 மணி நேரத்திற்குள் ஒளிப்பதிவு சி.டியுடன் கோதாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
சில நபர்களுடன் மீடியா அறைக்குச் சென்று  இந்த ஒளிப்பதிவை ஜனாதிபதி பார்வையிட ஆரம்பித்துள்ளார்.
கைகளும், கண்களும் கட்டப்பட்டிருந்த நபர் தூரத்தில் காண்பிக்கப்பட்டார். பின்னர் அவரது முகத்தை திரை முழுவதும் கொண்டுவர அவர் பேச ஆரம்பித்தார்.
”நான் அமல் ரொட்ரிகோ. அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர். களனி பிரதேசத்திலேயே நான் வசித்து வருகிறேன். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே நான் அதிகம் வேலைசெய்திருக்கிறேன். மகிந்த சாரின் வெற்றிக்கும் பாரிய பங்களிப்பு செய்துள்ளேன்.” என நீண்ட வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து ஒளிப்பாகிய வாக்குமூலத்தின் சிறிது நேரத்தில்
”ஏன் எனக்கு இவ்வாறு செய்கிறீர்கள். அமைச்சர் சொல்வதை எல்லாம் நான் செய்தேன். ‘ஜனாதிபதிக்கு அந்த…… இளம் நடிகை வேண்டுமாம்’ என எனக்கு அமைச்சர் கூறினார். 50 ஆயிரம் ரூபா செலவில் நான் அந்த நடிகை அழைத்துவந்து ஜனாதிபதிக்கு கொடுத்தேன். இவ்வாறு எல்லாம் செய்த எனக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள்” என அமல் ரொட்ரிகோவின் வாக்குமூலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, ”இதனை நிறுத்து” எனக் கத்திக் கொண்டு, ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்‌ஷ அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து கோதாபய ராஜபக்‌ஷ அந்த ஒளிப்பதிவு சி.டியுடன் அங்கிருந்து வெளியேறியதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக