03 மே 2012

3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்! தமிழர்கள் என்ன செய்வார்கள் ?


தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.
இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளபோதும், கொலைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை விட அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்றின் ஆவணப்படத்துக்கான வாக்குகள் அதிகரித்திச் சென்றுள்ளது. இதனால், இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படும் 2ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே தமிழர்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு தமது வாக்குகளை, இலங்கையின் கொலைக்களங்களுக்கு செலுத்தி அதனை உடனடியாக முன்னிலைப் படுத்தவேண்டும். இதுவே நாம் அதன் தயாரிப்பாளர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும். கீள் காணும் இணைப்பின் ஊடாகச் சென்று உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.
http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக