23 மே 2012

ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம்!


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,
 “சிறிலங்கா சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன்.
நாங்கள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம்“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக