20 மே 2012

இனவழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான சரத்பொன்சேகா விடுதலையாகிறார்!

இனவழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு கையெழுதிட்டுள்ளதாக ‘சிலோன் ருடே‘ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு கட்டாருக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் இந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் நாளை நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பின்னர் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக