24 மே 2012

மனித உரிமை விவகாரங்களில் நேர்மையில்லாத உலக நாடுகள்!

உலகின் பெரும்பாலான நாடுகள் மனித உரிமை விவகாரங்களில் நேர்மையாகச் செயற்படவில்லை என
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில், உலக நடுகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, 91 நாடுகளில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதெனவும், 101 நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதெனவும், சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் இடம்பெற்ற மனித உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை, பல நாடுகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டதாகவும், சிறிலங்கா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலீல் செட்டி, பக்கச்சார்பான முறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை உலக நாடுகள் வெளியிடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக