25 மே 2012

செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் சடலங்கள் எரிப்பு!


செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் மனித சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன!இராணுவத் தூபிகளை நிர்மாணிக்க செங்கற்களை உற்பத்தி செய்த அநுராதபுரம் செங்கல் ஆலையொன்றில் கடந்த காலங்களில் மிகவும் இரகிசயமான முறையில் இளைஞர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெதவனாராம, அபயகிரி போன்ற புனிதத் தளங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கும் ஆலையிலிருந்தே செங்கல் பெறப்படுகிறது. இந்த ஆலை யுனிஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும். ஒரே தடவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செங்கற்களை உற்பத்திசெய்யும் வசதிகள் இங்கு காணப்படுகின்றன.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவ நினைவுத்தூபி நிர்மாணத்திற்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதாகக் கூறி, இந்த செங்கல் ஆலையையும், அதற்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான காணிகளையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் ஆலை சிவில் பாதுகாப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர் வெளி நபர்கள் ஆலைக்குள் உட்பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில சமயங்களில் பாதுகாப்பு அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் அடிக்கடி வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல இளைஞர்களின் சடலங்கள் இங்கு எரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலையில் தொடர்ச்சியாக செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சடலங்கள் எரிக்கப்பட்டதற்கான எந்தவித தடயமும் கிடைக்காது. இதனாலேயே சடலங்களை எரிக்க இந்த ஆலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக