30 மே 2012

வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறார் மகிந்த ராஜபக்ஷ!

மகிந்த ராஜபக்ச அடுத்து வரும் வாரங்களில் பல நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இந்த வாரம் தாய்லாந்துக்கான நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த அதனை இரண்டு கட்டங்களாக சென்று வர திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாய்லாந்து சென்றுள்ள அவர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒரு நாள் இரவு மட்டும் கொழும்பு திரும்பவுள்ளார்...
பின்னர் மீண்டும் தாய்லாந்து திரும்பி தனது உத்தியோகபூர்வ பணிகளை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதன்போது தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ராவை சந்திப்பதுடன், பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் உள்ளவர்களையும் சந்திக்கவுள்ளார்.
தாய்லாந்துப் பயணத்தை அடுத்து இலங்கை ஜனாதிபதி அடுத்த மாத தொடக்கத்தில் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதையடுத்து வத்திக்கானுக்குப் பயணம் செய்து பாப்பரசரைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் பிறேசில், கியூபா ஆகிய நாடுகளும் ஜனாதிபதி மஹிந்த விரைவில் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
கியூபாவுக்கான தூதுவர் பதவியை, தாமரா குணநாயகம் நிராகரித்துள்ள நிலையில், கியூபாவுக்கு இலங்கை ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளும் வரை அங்கு தற்காலிகத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். தற்போது வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பிரதி தூதுவராகப் பணியாற்றும் எசல வீரக்கோனே ஹவானாவுக்கான தற்காலிகத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக