28 மே 2012

வலிகாமம் பகுதி வீடுகளில் படையினர் சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குச் செல்லும் படையினர் குடும்பப் பதிவு அட்டைகளைப் பெற்று சோதித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
வீடுகளுக்குச் செல்லும் படையினர் "ஆமி காட்" என அழைக்கப்படும் குடும்பப் பதிவு அட்டையை பார்வையிட்டு அதில் பதிவிலுள்ளவர்கள் வீட்டில் உள்ளனரா என விசாரிக்கின்றனர்.
அத்துடன், வீட்டிற்கு உறவினர் எவரேனும் வந்து செல்கின்றனரா? எனவும் விசாரிப்பதோடு அவ்வாறு எவரேனும் வருகை தந்திருப்பின் அவர் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர்.
முன்னாள் போராளிகள் குறித்த விடயங்களையும் அவர்கள் அவதானிப்பதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு செல்லும் படையினர் மற்றும் காவற்றுறையினர் அவர்களின் செயற்பாடு குறித்தும், நாட்டின் மீதும் அரசின் தற்போது அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை கேட்டுச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் போராளிகள் குறித்து மாதம் ஒருமுறை புலனாய்வுப் பிரிவினர், படையினர் மற்றும் காவற்றுறையினர், நேரடியாக சென்று விசாரித்து வரும் நிலையில், இம்முறை, முன்னாள் போராளிகளை புகைப்படம் எடுத்தும் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக