26 மே 2012

லண்டன் வரும் மகிந்தவை விரட்ட அணிதிரள்வோம்!

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச லண்டன் வருதை எதிர்த்து இன்று பிற்பகல் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்களப் பேரினவாதம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பின் உச்சமாய் 2009 ஆம் ஆண்டில் வகை தொகையின்றி ஒரு இலட்சத்திற்கும் மேலாக தமிழ் மக்களை கொன்று மிகப்பெரும் தமிழின அழிப்பினை செய்த போர்க்குற்றவாளியான சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் பிரித்தானிய தமிழர் ஒன்றியம் கேட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் பொது எதிரிக்கு எதிராக அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவே இன்று மாலை 4.00 மணியிலிருந்து 7.00 மணிவரை பிரித்தானிய தலைமை அமைச்சரின் காரியாலயம் அமைந்திருக்கும் டவ்னிங் வீதி லண்டன் என்ற இடத்தில் அனைவரையும் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் அமைப்புக்கள், ஆலய, பாடசாலை நிர்வாகங்கள், மற்றும் ஊர் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள் என அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக