27 மே 2012

இனவழிப்பு குற்றவாளியை அனுமதிக்காதே!லண்டனில் திரண்ட தமிழ் மக்கள்.

பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம்.
இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும்.
அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.
மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும்ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கவேண்டாம் எனக்கோரி நடாத்தப்பட்ட இக்கவனஈப்புப் போராட்டத்தில் காவற்துறை அனுமதியளித்திருந்த எண்ணிக்கையை விட பல மடங்குமக்கள் கலங்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக