28 மே 2012

கைதான ஆயுததாரிகளை விடுவித்தார் கோத்தபாய!

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்னும் சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
நேற்று முன்தினம் அதிகாலை களுவாஞ்சிக்குடியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாலைவேளை விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி அம்பாறை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 12.30 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த ஜீப் மற்றும் பிக்கெப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
பிக்கெப் வாகனத்தில் சாரதியும் இரு தமிழ் இளைஞர்களும் ஜீப் வாகனத்தில் சாரதியும் மூன்று தமிழ் இளைஞர்களும் இருந்துள்ளனர். அதில் இருந்த ஒருவர் தன்னை கருணா அம்மானின் நெருங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். ஏனையோர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வாகனங்களை பரிசோதனை செய்தபோது அதில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை ரவைகள் நிரம்பிய மெகசின் நான்கு இருந்துள்ளது. இவர்களை விசாரணை செய்தபோது இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவரின் கையில் எரிகாய அடையாளமும் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் என்ன நோக்கத்துடன் கொழும்பு வந்தார்கள் என சந்தேகமடைந்துள்ளனர் பொலீசார். அவர்களை சிறைவைக்க முயன்றபோது கொழும்பில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கதைத்துள்ளார். அவர் விசேட அதிரடிப்படையினரை திட்டியதுடன் உடனே அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரியுள்ளார்.
அதன் பின்னர் வேறு வழியின்றி அவர்களை ஆயுதங்களுடன் விடுவித்த விசேட அதிரடிப்படையினர் அம்பாறைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் இவர்கள் துப்பாக்கியுடன் கொழும்பு வருவது எதற்காக? தினமும் இவ்வாறு சட்டவிரோத ஆயுதம் கொண்டுவரப்படுகிறதா? என பாதுகாப்பு பிரிவு சந்தேகிக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக