12 ஆகஸ்ட் 2012

டெசோவில் முழக்கமிட்டார் கருணாநிதி!

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுள்ளனர்.
ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில் கூறியதாவது,
'இலங்கைத் தமிழர்களுக்கு திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்ததையும் திமுக நடத்திய போராட்டங்களையும் தமது உரையில் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார். இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆய்வரங்கில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பதவி இழந்ததும் தமிழர் பிரச்சனையால்தான் தமிழரால்தான் என்பதை சொல்ல மறந்து விட்டார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக