20 ஆகஸ்ட் 2012

சிறிலங்கா இராணுவப் படையின் மூத்த அதிகாரி மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக சாவு!

வடக்கு கிழக்கில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட, சிறிலங்கா இராணுவப் படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக, புற்றுநோய் காரணமாக நேற்றுமுன்தினம் மரணமாகியுள்ளார்.
தற்போது சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக உள்ள ஜெயதிலகவுக்கு வயது 54.
கடந்த 34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளின்போது, வடக்கு கிழக்கில் தீவிரமாக ஈடுபட்ட ஜெயதிலக,
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றியும், 2009ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்திலும் பங்கேற்றவர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றிலும் இவர் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக