25 ஆகஸ்ட் 2012

எமது உரிமையைப் பெற இந்த அரசு தந்துள்ள சந்தர்ப்பம்தான் கிழக்குத் தேர்தல்.

கிழக்கு மாகாணத் தேர்தலை எமக்கு திணித்துள்ள போதிலும் அதனையே பயன்படுத்தி தமிழ் தேசியத்தையும், எமது உரிமையையும், இணைந்த வடக்கு, கிழக்கினையும், சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ள்தாக அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ் மக்களாகிய நாம் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எமக்கு உள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை கல்முனையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழர்களின் உரிமையை, சுதந்திரத்தை கோருகின்ற ஒரே கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் ஆதரிப்பதன் மூலமே அதனை உறுதிபடுத்த முடியும். இது எமக்கான கடைசி சந்தர்ப்பம். எமக்கு பக்க பலமாக புலம் பெயர்ந்த எமது உறவுகள் உள்ளன.
நீங்கள் நேர்மையாகவும், தமிழ் தேசியப் பற்றுடனும், எமது கொள்கைகளில் இருந்து மாறுபடாமலும், எமக்காக வித்தாகிய எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும். எமக்கு உரிமை வேண்டும், எமது தேசியம் வேண்டும், எங்களது காணி எமக்கு வேண்டும், எம்மை நாமே ஆள வேண்டும். எமது நியாயமான போராட்டத்தின் வெற்றி, வெகு தொலைவில் இல்லை. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக