21 ஆகஸ்ட் 2012

அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்ட சம்பந்தனுடன் கூட்டுச்சேரத்தயார் இல்லை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழரசுக்கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பம் தெவித்திருப்பதாகவும் இது தொடர்பிலான தொடர் சந்திப்பு இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் அப்பட்டமான பொய் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்குத் தேர்தல் களத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் தமிழ்லீடர் இணையத்தளத்திற்கு தகவல் வெளியிட்ட கஜேந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மருதநாயகம் தமக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் கலாசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யோகேஸ்வரன் வதந்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். குறித்த சம்பவத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதேபோல தமிழரசுகட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படைக் கொள்கைகளையே கைவிட்ட தமிழரசுக்கட்சியினருடனும் அதன் தலைவருடனும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டுச் சேரத் தயார் இல்லை என்றும் தெரிவித்த கஜேந்திரன் கிழக்குத் தேர்தல் களத்தில் வெற்றிவாய்ப்பை நோக்காகக் கொண்டே தமது கட்சி தொடர்பிலான வதந்தியில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக