
சிறிலங்கா இராணுவத்தின் 56வது டிவிசன் தளபதி பிரிகேடியர் ரணவக்கவின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த வழிபாட்டு இடத்தில் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்பறமாக போதி மரம் (அரசு) ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.
சிறி சம்புத்தரஜ விகாரை என்ற பெயரில் இங்கு பாரிய பௌத்த விகாரை ஒன்றைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்முதற்கட்டமாகவே புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டு அறை மற்றும் போதி மரத்துக்கு அமைக்கப்பட்ட வேலி ஆகியன கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
வடமத்திய மாகாண பிரதி சங்க நாயக்கர் வண எட்டம்பகஸ்கட கல்யாண திஸ்ஸ நாயக்க தேரர், வன்னிப் படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எஸ்.பெரேரா ஆகியோர் இந்த வழிபாட்டு அறை மற்றும் போதி மர வேலி ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக