18 ஆகஸ்ட் 2012

அவுஸ்திரேலியாவில் அகதிகள் தொடர்பிலான சட்டத்தில் மாற்றம்!

அவுஸ்திரேலியா தனது அகதிக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அகதிகள் விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியா புதிய சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.
இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் அகதிகளை வேறு நாடுகளில் தங்க வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேறு நாடுகளுக்கு இடம் நகர்த்துவது குறித்த சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அகதிகளை தங்க வைப்பதனால் நீண்ட காலம் அகதிகள் காத்திருக்க நேரிடும் என்ற காரணத்தினால் முன்னர் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
பப்புவா நியூகினியா உள்ளிட்ட சில நாடுகளில் அகதிகளை தங்க வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்த அதிகளவான அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக