22 ஆகஸ்ட் 2012

ஒபாமாவின் ஆலோசகர் இந்தியா அவசர பயணம்! அதிர்ச்சியில் இலங்கை!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான ஆலோசகரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவருமாகிய சூசன் ரைஸ் அவசர பயண மொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார்.
பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பிலான பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக இந்தியா வரும் சூசன் ரைஸ் புது டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
முக்கியமானதாகக் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்தபோது அதன் பின்னணியில் இருந்து காய்களை நகர்த்திய சூசன் ரைஸ், இப்போது பிராந்திய பாதுகாப்பு என்ற ரீதியில் அவசரமாக டில்லி வருவது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து சமுத்திர பிராந்தி யத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருவதாக இந்தியா தொடர்ச்சியாகக் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் சூசன்ரைஸின் இந்த பயணம் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா மனித உரிமைகள் சபையின் அடுத்த அமர்வு செப்ரெம்பரில் நடைபெறவுள்ள நிலையில் சூசன் ரைஸ் திடீரென இந்தியாவுக்கு வருகை தருவது இலங்கைக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மனித உரிமைகள் சபையில் கடந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை அது சரியான வகையில் பயன்படுத்தியுள்ளதா என்பதை இந்த இந்திய வருகையின் போது சூசன் ரைஸ் கேட்டறிந்து கொள்வார் எனவும் ஊகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக