05 ஆகஸ்ட் 2012

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என ரணசிங்க பிரேமதாச எச்சரிக்கைவிடுத்தார் – மெஹ்ரோட்ரா

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்கபிரேமதாச எச்சரிக்கை விடுத்ததாக இந்தியாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் லக்ஹான்லால் மெஹ்ரோட்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என பிரேமதாச எச்சரிகi;க விடுத்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை உறவுகள் தொடர்பில் அண்மையில் கொழும்பில்நடைபெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது மெஹ்ரோட்ரா இதனைத்தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேடபிரதிநிதியான பி.ஜீ. தேஷ்முக்கிடம், பிரேமதாச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
1989 ஆண்டு ஜூலை இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் மத்திய அரசாங்கம்ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கா விட்டால் தனது அரசியல் வாழ்க்கைசூன்யமாகிவிடும் என பிரேமதாச தெரிவித்தார்.
1989ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதிக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால்தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என பிரேமதாச குறிப்பிட்டார்.
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக போராடுவதற்கு தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு பிரேமதாச பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கினார்.
இந்திய அமைதி காக்கும் படையினரை நாட்டை விட்டு வெளியேற்ற எந்தஎல்லைக்கும் செல்லத் தயார் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளைதுண்டித்துக் கொள்ளவும் தயார் எனவும் பிரேமதாச தெரிவித்தார் என மெஹ்ரோட்ராகுறிப்பிட்டுள்ளார்
தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையும் நோக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
1990ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி அனைத்து அமைதி காக்கும்படையினரும் இந்தியா திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக