16 ஆகஸ்ட் 2012

கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் ஒருபோதும் மறக்க போவதில்லை

  • thamilaruvi_16_8
கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டினால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எள் முனை அளவு கூட நன்மை கிடையாது என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். பின்னர் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கருணாநிதி நடத்திய டெசோ மாநாடு மாநில அரசின் தடுப்பு நடவடிக்கை இல்லையென்றால் எந்தவித தடயமும் இல்லாமல் முடிந்திருக்கும்.
நடந்த முடிந்த டெசோ மாநாட்டினால் ஈழத் தமிழர்களுக்கு எள் முனையளவும் நன்மை இல்லை. 1956 முதல் அறிக்கை, பொதுக்கூட்டம், பேரணி மூலம் ஈழ மக்களுக்கு அரசியல் தீர்வை தந்துவிட முடியும் என்று நினைப்பது கலைஞரின் அரசியல் நாடகத்தில் ஒன்றாக இருக்க முடியுமே தவிர நிரந்த அரசியல் தீர்வை தராது.
இந்திய அரசு நினைத்தால் தீர்வு ஏற்படுத்தலாம். தி.மு.க.அந்த கூட்டணியில் இருக்கிறது. இந்திய அரசு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டுவிட்டு செய்யமுடியாத மக்களை திரட்டி செய்ய வேண்டும் என்று சொல்வது கருணாநிதியின் கபட அரசியல். உலக தமிழர்கள் கருணாநிதி செய்த துரோகத்தை மறக்க போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக