14 ஆகஸ்ட் 2012

நவநீதம்பிள்ளையின் முடிவினால் சிறிலங்கா கலக்கம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான பூகோள கால மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கலக்கமடைந்துள்ளது.
இந்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்த மூன்று நாடுகளையும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருந்தார்.
ஆனால் இந்த நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது சிறிலங்காவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்த மூன்று நாடுகளும் ஆதரித்திருந்தன.
இதுவே சிறிலங்காவுக்குக் கலக்கம் ஏற்படக் காரணம் என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக