07 ஆகஸ்ட் 2012

மகிந்தவுக்கு விலங்குகளை வளர்க்கும் புதுமையான நோய்: மங்கள சமரவீரவின் கடி!

சிறிலங்கா ஜனாதிபதிக்கு விலங்குகளை விலைக்கு வாங்கி வளர்க்கும் புதுமையான நோய் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் 45 லட்சம் ரூபா செலவிட்டு அமெரிக்காவில் இருந்து பஞ்சவர்ண கிளி இறக்குமதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு இந்த கிளியை எடுத்துச் செல்வதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த தனது கிளியை எடுத்துக் கொண்டு தங்காலைக்கு சென்றிருந்த போது, அந்த கிளி ஜனாதிபதியை விட்டு பறந்து சென்று விட்டதாகவும் பின்னர் அது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடற்படைச் சிப்பாய ஒரவரிடம் சிக்கியதாகவும் - அதனை பிடித்த அந்த சிப்பாய், கிளியே சோறு சாப்பிட்டாய எனக் கேட்ட போது நாட்டை சாப்பிட்டேன், நாட்டை சாப்பிட்டேன் எனக் கூறியுள்ளது என்றும் மங்கள நக்கலாக குறிப்பிட்டுள்ளார். கோத்தபாயவும் இவ்வாறு செல்லப்பிராணிகளை வளர்க்கின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அரசாங்கத்திற்கு செய்தி ஒன்றை வழங்க வேண்டும். மாகாண சபைகளை கைப்பற்றி ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும், இந்த செய்தியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார். சப்ரகமுவ மாகாண சபைக்கு போட்டியிடும். சிறிபால கிரியெல்ல என்பவரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக