05 ஆகஸ்ட் 2012

பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பது தமிழ் மக்களை அழிக்க வழங்கும் அங்கீகாரமாகும்: புவனேந்திரன்

இன்று தமிழர்களின் தாயக பூமியில்; தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்காக அரசாங்கம் அபிவிருத்தி என சிங்கள மக்களை குடியமர்தி வருகின்றது. எனவே தமிழ் மக்கள் பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பது தமிழ் மக்களை அழிக்க வழங்கும்; ஆங்கீகாரமாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட வேட்பாளர் வேல்முருகு புவனேந்திரன் (நகுலன்) தெரிவித்தார்.
தம்பிலுவில் பிரதேசத்தைச் சோந்த புவனேந்திரன் (நகுலன்) அவரது இல்லத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நேற்று சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசகையில்:
தமிழ்; மக்களின் தாயக பூமியான இணைந்த வடகிழக்கை பிரித்து கிழக்கில் அரசு அதிகாரத்துடன் ஆட்சியமைத்து அந்த ஆட்சி தமிழர்கள்தான் ஆழுவதாக சுயநல நயவஞ்சக தமிழ் சர்வதேசத்திற்கு தமிழ்மக்களே தமிழர் பிரதேங்களை ஆழுவதாக காட்டிக் கொண்டு தலையாட்டிப் பொம்மைகள் மூலம் தமிழர்கள் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்கள மக்களை குடியேற்றியதுடன் அரச நிலங்களையும் தமிழர்களின் பொருளாதாரங்களையும் சுற்றுலாத்துறை மற்றும் தேசிய அபிவிருத்தி என அரசாங்கம்; வாரிச் சுருட்டீக்கொண்டுள்ளது.
தமிழர்களின் கல்வியையும் பேரினவாதிகளின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு நடாத்தப்பட்டுவருவதுடன் தமிழர்களின் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றுது எனவே தமிழ் மக்கள் எவரும் பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடகாலமாக அநியாயங்களும் அட்டகாசங்களும் அடக்குமுறைகளும் பேரினவாதிகளின்; சின்னங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகும்.
இன்று யுத்தம் முடிந்து 3 வருடங்களுக்கு மேலாகியும் அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்றப்படாமல் அந்த மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனால் தங்கவேலாயுதபுரம் கஞ்சிக்குடியாறு பிரதேசத்தில் மீள்குடியேற்றி விட்டோம் அந்த மக்களின் வழ்வாரத்தை மேம்படுத்த விவசாயம் செய்ய தண்ணீர் பம்கள் முட்கம்பிகள் வழங்கியுள்ளோம்.
வழங்கும்; என்ற பேர்வையில் திட்டமிட்டு தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் சிங்கள மக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட வேட்பாளரான வேல்முருகு தலையாட்டிப் பொம்மைகளிடம் வழங்கி விட்டு அடையாளங்கள் வரலாறுகள் மூடிமறைக்கப்பட்டு வருவதுடன் வரலாற்று இந்து ஆலயங்களை படுகொலைகளும் நிலஆக்கிரம்புக்கள் இடம்பெற்றுருவதை தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டு வாக்களிப்பார்கள் என்றால் தமிழ்மக்களை முற்றாக அழிக்க கஞ்சிக்குடியாறு சாகாமம் தாமரைக்குளம் போன்ற 1200 குடும்பங்களை சுயமாக குடியேறிய சில குடும்பங்களை வைத்து சில கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் கிணறுகள் அமைத்துத்தருக்கின்றோம் என பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டுவிட்டு தண்ணீர் இன்றி தோண்டிய கிணறுகளை அரைகுறையாக விட்டுவிட்டு அதன் பணத்தை ஏப்பமிட்டுள்ளனர்.
இது தான் தமிழ் மக்களுக்கு சில கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள்; இந்த மூன்று வருடங்களாக செய்த சாதனையாகும். இதேவேளை தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்துள்ளோம் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவோம் போன்ற அற்பசொற்ப ஆசைகளை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ் மக்கள் வாக்குகளை கொள்ளையிடமுடியும். எனவும் தமிழ்மக்களுக்கு செய்த அட்டூழியங்கள் படுகொலைகள் என்பவற்றை மறந்து சில தமிழ் நயவஞ்சகர்கள் நற்பாஷையுடன் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வீடுவீடாக ஏறியிறங்குகின்றனர்.
எனவே இவ் நயவஞ்சகர்கள் கூட்டத்தை தமிழ் மக்கள் எமது தமிழ் மண்ணில் இருந்து விரட்டியடிக்க தமிழ்மக்களின் வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டு சின்னத்திற்கு அளித்து தமிழ் மக்களின் கனவை நனவாக்குவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக