17 ஆகஸ்ட் 2012

தென்னாபிரிக்க அனுசரணையை இலங்கை ஒருபோதும் ஏற்காது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கு, தென்னாபிரிக்க அரசு வழங்க முன் வந்துள்ள அனுசரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அரசியல் தீர்வுக்கு, தமது அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக, கொழும்பு வந்த தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் எப்ராகிம் தலைமையிலான குழு இலங்கை அரசதரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றிடம் கூறியிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள், உள்ளூர் அரசியல் முயற்சிகளில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தேவையில்லை என்று கூறியுள்ளன. அதற்கு இலங்கை அரசு ஒருபோதும் இணங்காது எனவும் அவை கூறியுள்ளன.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைத் தளமாக கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆசியுடன் தான் தென்னாபிரிக்கா இந்த அனுசரணையை வழங்க முன்வந்துள்ளதாக் நம்பப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தென்னாபிரிக்கா இந்த அனுசரணைப் பணியை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக