20 செப்டம்பர் 2012

தொடர்ந்தும் செறிவான இராணுவப் பிரசன்னம்!

யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் செறிவான இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக இந்திய ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தம் முடிவுறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைந்தபாடில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 19 படைப்பிரிவுகளில் 16 படைப்பிரிவுகள் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா மூன்று இராணுவப் படைப்பிரிவுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தின் உள்ளகத் தகவல்களின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தனை படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்ற துல்லியமான புள்ளி விரபங்கள் வெளியிடப்படாத போதிலும், சுமார் 85000 முதல் 86000 வரையிலான படையினர் வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் கூடுதலான இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலைமையான தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கு முட்டுக்கட்டையாக அமையலாம் என குறித்த இந்திய ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக