05 செப்டம்பர் 2012

பிள்ளையானின் கிராமத்தில் TNA தீவிரபிரச்சாரம்!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், இன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் ஊரான பேத்தாழை கிராமத்திற்கு கல்குடா தொகுதி வேட்பாளர் சகிதம் பிரச்சாரத்திற்காக சென்றார்.
இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வருகையை பேத்தாழை வாழ் பொதுமக்கள் பெரும் ஆவலோடு வரவேற்றனர். மேலும் ஜனாதிபதி வருவதனால் அதற்கான பஸ் வண்டியில் நிரப்பிச் செல்வதற்கு தயாராகி இருந்த கிழக்கு மாகாண வேட்பாளரான சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆதரவாளர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் வீடு வீடாகச் செல்லும் போது பேத்தாழை பொதுமக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதில் காட்டும் அக்கறையை பொறுக்க முடியாமல் ஒரு சிலர் பிரச்சாரத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களின் குழுவை பேத்தாழையில் இருந்து வெளியேறுமாறு கூறினர்.
அவ்விடத்திற்கு உடன் சென்ற பாராளுன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சம்பந்தப்பட்டோர்களுக்கு தகுந்த பதில்களை வழங்கி தமது பிரச்சார நடவடிக்கையை தொடர்ந்தார். இவர்களின் சிலர் வாழைச்சேனை பிரதேச சபையில் ஊழியர்களாகவும், உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிகின்றனர். சிலர் பிரதேச சபையில் சம்பளம் பெற்றுக்கொண்டு அரசாங்க சுயேட்சைக்குழு வேட்பாளராகவும் இறங்கியுள்ளனர்.
பேத்தாழை வாழ் பொதுமக்கள் பெரும்பாலானோர் இன்று அக்கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமனற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் தாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சி;ன்னத்திற்குத்தான் உறுதியளித்துள்ளனர்.
தமது கிராமத்திலேயே எல்லா அபிவிருத்தியையும் செய்துள்ளதாக மேடைகளில் குரல் எழுப்பும் முன்னாள் முதலமைச்சருக்கு இது பெரும் சங்கட நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக பேத்தாழையில் இருந்து கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை தமிழ் மக்களின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் உரிமையை பெறும் பங்கில் நாங்களும் செயற்படுவோம் என பேத்தாழை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக