08 செப்டம்பர் 2012

கருணாநிதி ஜெயலலிதா இருவருக்குமே ஈழப்பிரச்சினை தேர்தல் நேர ஊறுகாய்!

“மழை விட்டும் தூவானம் விடவில்லை“ என்று சொன்ன கலைஞருக்கும் “போர் நடந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும் ஈழப் பிரச்னை தேர்தல் நேரத்து ஊறுகாய் மட்டுமே என ஜுனியர் விகடன் தெரிவித்துள்ளது.
கழுகார் கேள்வி பதில் பகுதியில், வாசகர் ஒருவர் 'பிரணாப் முகர்ஜியை நம்பித்தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்’ என்கிறாரே கருணாநிதி? எனக் கேட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு கழுகாரால் பதிலளிக்கப்பட்டிருந்தது.
”எப்படிப்பட்ட நேர்மையாளரை ஜனாதிபதி ஆக்க கருணாநிதி துடித்திருக்கிறார் பாருங்கள்! கருணாநிதியின் உண்ணாவிரதத்தின்போது, 'கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்’ என்று இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தது. உடனே, உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டார். அதன் பிறகும் குண்டு வீச்சு தொடர்ந்தது. தமிழர்கள் செத்து விழுந்தார்கள். இதை கருணாநிதியிடம் சுட்டிக்காட்டியபோது, 'மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் சொன்னார். 'போர் நடந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று ஜெயலலிதா சொன்னதும், குண்டு வீச்சை, 'தூவானம்’ என்று கருணாநிதி வர்ணித்ததும்... ஒரே குரல்தான். இரண்டு பேருக்குமே ஈழப் பிரச்னை தேர்தல் நேரத்து ஊறுகாய் மட்டுமே!”
1985 டெசோ மாநாடு, 2012 டெசோ மாநாடு... ஒப்பிட முடியுமா? எனக் கேட்கப்பட்ட பிறிதொரு கேள்விக்கு, ”அப்போது நடந்தது உண்மையை ஊருக்கு உணர்த்த. இப்போது நடந்தது தப்பை மூடி மறைக்க. கருணாநிதி எத்தனை மாநாடுகள் நடத்தினாலும், 2008 டிசம்பர் முதல் 2009 மே வரையிலான ஏழு மாத கால பாவத்தைக் கழுவவே முடியாது!” எனப் பதிலளிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக