21 செப்டம்பர் 2012

போராட்டம் நடத்தியோர் மீது கழிவு எண்ணெய் ஊற்றிய விஷமிகள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், கேட்பார்குளம் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும், காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும் காணாமல் போனோர் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக்கட்சித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக